"கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்"


கோவை, நவம்பர் 7: கோவை, ஒண்டிப்புதூர் அருகே இருகூர் இரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், மேம்பாலத்தின் மீது அதிகளவிலான விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த மேம்பாலத்தை திமுக மாநகர தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டதுடன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து, அவர் கூறியதாவது:- "இருகூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் தற்போது வரை இங்கு விபத்து ஏற்பட்டு 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் கூட அமைக்கப்படாத அவலநிலை நீடிக்கிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறை இந்த மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



திமுக ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாட்டின்போது, அடிக்கல் நடப்பட்ட காந்திபுரம் மேம்பாலம் மக்கள் பயன்படும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் திமுக ஆட்சியில் போடப்பட்ட வரைபடத்தை மாற்றி தனியார் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மாவட்டம் முழுக்க ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

கோவையில் தற்போது நடைபெற்று வரும் 7 மேம்பாலப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...